Tamilnadu
தின்பண்டம் என நினைத்து விசிலை விழுங்கிய குழந்தை.. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்!
சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி வனஜா. இந்த தம்பதிக்கு தர்சன் என்ற 3 வயது மகனும், கயல்விழி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கயல்விழி அங்கிருந்த விசிலை எடுத்து தின்பண்டம் என நினைத்து விழுங்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் திணறியுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் வனஜா குழந்தையை உடனே தூக்கிக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்குச் சென்றார். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடும் போது தின்பண்டம் என நினைத்துத் தவறுதலாக விசிலை விழுங்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! அது அனைவருக்கும் தெரியும்!”: முதலமைச்சர் திட்டவட்டம்!
-
“ஆளத் தெரியாமல், இந்தியாவை அடகு வைக்கும் பா.ஜ.க.விடமிருந்து நாட்டைக் காப்போம்!” : கி.வீரமணி அறிக்கை!
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘பேட்’ குறித்து சர்ச்சை கிளப்பிய இலங்கை வீரர்! : முழு விவரம் உள்ளே!
-
“இந்திய நாட்டை விற்க பா.ஜ.க-வுக்கு வெட்கமாக இல்லையா?” : மக்களவையில் ராகுல் காந்தி எம்.பி. சரமாரி கேள்வி!