Tamilnadu
தின்பண்டம் என நினைத்து விசிலை விழுங்கிய குழந்தை.. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்!
சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி வனஜா. இந்த தம்பதிக்கு தர்சன் என்ற 3 வயது மகனும், கயல்விழி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கயல்விழி அங்கிருந்த விசிலை எடுத்து தின்பண்டம் என நினைத்து விழுங்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் திணறியுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் வனஜா குழந்தையை உடனே தூக்கிக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்குச் சென்றார். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடும் போது தின்பண்டம் என நினைத்துத் தவறுதலாக விசிலை விழுங்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!