Tamilnadu
தின்பண்டம் என நினைத்து விசிலை விழுங்கிய குழந்தை.. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்!
சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி வனஜா. இந்த தம்பதிக்கு தர்சன் என்ற 3 வயது மகனும், கயல்விழி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கயல்விழி அங்கிருந்த விசிலை எடுத்து தின்பண்டம் என நினைத்து விழுங்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் திணறியுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் வனஜா குழந்தையை உடனே தூக்கிக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்குச் சென்றார். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடும் போது தின்பண்டம் என நினைத்துத் தவறுதலாக விசிலை விழுங்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
குதிரை பேரம் ; அத்தனை அசிங்கத்துக்கும் வைகோ ஒப்புதல் வாக்குமூலம் : ஆதாரங்களுடன் உண்மை சொன்ன முரசொலி!
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!