Tamilnadu
நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்.. அந்தரத்தில் தொங்கிய பேருந்து: பாம்பன் பாலத்தில் திக் கிக் நிமிடங்கள்!
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, இன்று காலை பாம்பன் பாலத்தில் விபத்துக்குள்ளானது. முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்த முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முன்னதாக விபத்து ஏற்படுவதை அறிந்து, சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றார். ஆனால் பேருந்து, பாலத்தின் பக்கவாட்டு சுவரை இடித்துக்கொண்டு கடலில் விழாமல் பேருந்து அந்தரத்தில் தொங்கி நின்றது.
பின்னர் பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கினர். இதுபற்றி தகவல் அறிந்த வந்த போலிஸார், பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் பேருந்தை மீட்டனர். இதையடுத்து விபத்திற்குள்ளான பேருந்துகள் அங்கிருந்து அகற்றப்பட்டது.
இந்த விபத்தில் 5 பேர் படுயாகம் அடைந்துள்ளனர். பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!