Tamilnadu
நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்.. அந்தரத்தில் தொங்கிய பேருந்து: பாம்பன் பாலத்தில் திக் கிக் நிமிடங்கள்!
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, இன்று காலை பாம்பன் பாலத்தில் விபத்துக்குள்ளானது. முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்த முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முன்னதாக விபத்து ஏற்படுவதை அறிந்து, சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றார். ஆனால் பேருந்து, பாலத்தின் பக்கவாட்டு சுவரை இடித்துக்கொண்டு கடலில் விழாமல் பேருந்து அந்தரத்தில் தொங்கி நின்றது.
பின்னர் பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கினர். இதுபற்றி தகவல் அறிந்த வந்த போலிஸார், பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் பேருந்தை மீட்டனர். இதையடுத்து விபத்திற்குள்ளான பேருந்துகள் அங்கிருந்து அகற்றப்பட்டது.
இந்த விபத்தில் 5 பேர் படுயாகம் அடைந்துள்ளனர். பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!