Tamilnadu
நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்.. அந்தரத்தில் தொங்கிய பேருந்து: பாம்பன் பாலத்தில் திக் கிக் நிமிடங்கள்!
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, இன்று காலை பாம்பன் பாலத்தில் விபத்துக்குள்ளானது. முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்த முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முன்னதாக விபத்து ஏற்படுவதை அறிந்து, சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றார். ஆனால் பேருந்து, பாலத்தின் பக்கவாட்டு சுவரை இடித்துக்கொண்டு கடலில் விழாமல் பேருந்து அந்தரத்தில் தொங்கி நின்றது.
பின்னர் பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கினர். இதுபற்றி தகவல் அறிந்த வந்த போலிஸார், பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் பேருந்தை மீட்டனர். இதையடுத்து விபத்திற்குள்ளான பேருந்துகள் அங்கிருந்து அகற்றப்பட்டது.
இந்த விபத்தில் 5 பேர் படுயாகம் அடைந்துள்ளனர். பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பல்கலை. வேந்தர் நியமனம், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம்: செல்வப்பெருந்தகை காட்டம்!
-
2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி… ஆதரவாக பேசிய தோனி! முழுவிவரம் உள்ளே!
-
நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் திருவுருவச் சிலை... திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் பயிற்சி... எங்கு? எப்போது?
-
மாணாக்கர்களின் கல்விக்காக... அரசு கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள்.. - அமைச்சர் கோவி.செழியன் தகவல்!