Tamilnadu
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெளுத்துக்கட்டப்போகும் மழை .. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை என்ன?
ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று சென்னையில் காலையில் இருந்தே மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது.
இதையடுத்து இன்றும் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களில் காலையில் இருந்தே கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு அக்டோபர் 9ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்தியாவில் தென்மேற்கு பருவமழை வெளியேறி வரும் நிலையில், பருவமழையைத் தீவிரப்படுத்தும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்தது. இது மெல்ல வலுவிழந்து ஆந்திர கடலோர பகுதியை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நேற்று முதல் நிலவி வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக வரும் 9 ஆம் தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும். இன்றைய தினம் இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!