Tamilnadu
800 கிராம் கஞ்சா வைத்திருந்த அ.தி.மு.க நிர்வாகி.. போலிஸார் ரோந்து பணியின் போது சிக்கியது எப்படி?
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். அ.தி.மு.க நிர்வாகியான இவர் கருப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக உள்ளார். இவர் மீது ஏற்கனவே திருட்டு வழிப்பறி அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் சோழவந்தான் காவல் நிலையத்தில் உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு கருப்பட்டி பகுதியில் சோழவந்தான் போலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனத்தில் வந்த செல்வகுமாரை நிறுத்தி போலிஸார் சோதனை செய்தனர்.
அப்போது, அவரிடம் 800 கிராம் கஞ்சா இருந்தை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலிஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கூட்டுறவு சங்க தலைவரே கஞ்சா வைத்திருந்தது கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் இரும்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக பா.ஜ.க, அ.தி.மு.க, இந்து முன்னணியினர் கஞ்சா வழக்கில் கைதாகி வருவது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்துள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!