Tamilnadu
சாலையோரத்தில் கிடந்த ரூ.500 நோட்டு கட்டுகள்.. அள்ளிச்சென்ற பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி !
வேலூர் கொணவட்டம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று காலை காரில் வந்த மர்ம கும்பல், பணக்கட்டுகளை போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பணத்தில் சில நோட்டுக்கட்டுகள் காற்றில் பறந்து சென்றுள்ளன. இதனைக்கண்ட பொதுமக்கள் அதனை எடுத்து சென்றுள்ளனர்.
மேலும் ஒரு சிலர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் சாலையோரத்தில் இருந்த பணக்கட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பணத்தை எடுத்துச்சென்ற சில பொதுமக்களிடம் இருந்தும் பணத்தை திரும்ப பெற்றனர்.
இதையடுத்து அதனை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து எண்ணி பார்க்கையில் அதில் ரூ.14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது. பின்னர் அதனை சோதனை செய்தபோது அது கலர் ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டுகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து வருகின்றனர்.
மேலும் அங்கிருந்து பறந்து சென்ற பண நோட்டுகளை எடுத்துச்சென்ற பொதுமக்கள் அந்த 500 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்த வேண்டாம் என்றும், அது கள்ள நோட்டு எனவும் காவல்துறை எச்சரித்துள்ளனர். அதோடு வியாபாரிகள் இது போன்று கள்ள நோட்டு விவகாரம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!