Tamilnadu
சாலையோரத்தில் கிடந்த ரூ.500 நோட்டு கட்டுகள்.. அள்ளிச்சென்ற பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி !
வேலூர் கொணவட்டம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று காலை காரில் வந்த மர்ம கும்பல், பணக்கட்டுகளை போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பணத்தில் சில நோட்டுக்கட்டுகள் காற்றில் பறந்து சென்றுள்ளன. இதனைக்கண்ட பொதுமக்கள் அதனை எடுத்து சென்றுள்ளனர்.
மேலும் ஒரு சிலர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் சாலையோரத்தில் இருந்த பணக்கட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பணத்தை எடுத்துச்சென்ற சில பொதுமக்களிடம் இருந்தும் பணத்தை திரும்ப பெற்றனர்.
இதையடுத்து அதனை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து எண்ணி பார்க்கையில் அதில் ரூ.14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது. பின்னர் அதனை சோதனை செய்தபோது அது கலர் ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டுகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து வருகின்றனர்.
மேலும் அங்கிருந்து பறந்து சென்ற பண நோட்டுகளை எடுத்துச்சென்ற பொதுமக்கள் அந்த 500 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்த வேண்டாம் என்றும், அது கள்ள நோட்டு எனவும் காவல்துறை எச்சரித்துள்ளனர். அதோடு வியாபாரிகள் இது போன்று கள்ள நோட்டு விவகாரம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !