Tamilnadu
குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? .. TNPSC அறிவித்தது என்ன?
தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான TNPSC குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு நடைபெற்றது. அதேபோன்று, ஜூலை 24 ஆம் தேதி காலியாக உள்ள 7,138 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். எனவே குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் TNPSC சார்பில் அக்டோபர் மாதத்தில் குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்படும் என புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.
அதேபோல் அக்டோபர் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வுகள் வெளியிடப்படும் என புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!