Tamilnadu
குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? .. TNPSC அறிவித்தது என்ன?
தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான TNPSC குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு நடைபெற்றது. அதேபோன்று, ஜூலை 24 ஆம் தேதி காலியாக உள்ள 7,138 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். எனவே குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் TNPSC சார்பில் அக்டோபர் மாதத்தில் குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்படும் என புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.
அதேபோல் அக்டோபர் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வுகள் வெளியிடப்படும் என புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!