Tamilnadu

குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? .. TNPSC அறிவித்தது என்ன?

தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான TNPSC குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு நடைபெற்றது. அதேபோன்று, ஜூலை 24 ஆம் தேதி காலியாக உள்ள 7,138 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். எனவே குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் TNPSC சார்பில் அக்டோபர் மாதத்தில் குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்படும் என புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.

அதேபோல் அக்டோபர் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வுகள் வெளியிடப்படும் என புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.

Also Read: வரி ஏய்ப்பு விவகாரம் : "AR ரகுமானுக்கு எதிராக ஆதாரம் உள்ளது.." - GST ஆணையம் பதில் மனுவால் பரபரப்பு !