Tamilnadu
குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? .. TNPSC அறிவித்தது என்ன?
தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான TNPSC குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு நடைபெற்றது. அதேபோன்று, ஜூலை 24 ஆம் தேதி காலியாக உள்ள 7,138 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். எனவே குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் TNPSC சார்பில் அக்டோபர் மாதத்தில் குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்படும் என புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.
அதேபோல் அக்டோபர் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வுகள் வெளியிடப்படும் என புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.
Also Read
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !