Tamilnadu
அண்ணன் முன் நடித்து காட்டியபோது தூக்கு கயிற்றில் சிக்கிய சிறுவன்.. விளையாட்டு வினையான சோகம்..
சென்னை புழல் அடுத்த காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் இளையமகன் கார்த்திக் (வயது 11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் இரவு கார்த்திக்கும் அவரது அண்ணனும் இணைந்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது தூக்குபோட்டு விளையாடுவது போல் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு விளையாடியுள்ளனர்.
அப்போது அவரது அண்ணன் வெளியே நின்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார்த்திக் தூக்கு கயிறில் சிக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார். பின்னர் இதனைக்கண்ட அவரது அண்ணன் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.
பின்னர் அவர்கள் வந்து போலிஸாருக்கு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளனர். அதன் படி அங்கு வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Also Read
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !
-
“சிறையில் அடைத்ததற்கு பதிலடி கொடுக்க வாக்களிப்போம்” - ஆம் ஆத்மியின் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை!
-
குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 149 கிலோ போதைப்பொருள் : சீல் வைக்கப்பட்ட தயாரிப்பு ஆலை !