Tamilnadu
பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட பா.ஜ.க மூத்த நிர்வாகி.. முகம் சுளித்த சசிகலா புஸ்பா !
தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 வது நினைவு தினம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவுகூறப்பட்டது. இதற்காக அவர் நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
தி.முக. சார்பாக உதயநிதி ஸ்டாலின் மரியாதையை செலுத்தினார். அதேபோல பா.ஜ.க சார்பாகவும் பல நிர்வாகிகள் கூட்டமாக நினைவிடத்தில் மரியாதை செய்தனர். அப்போது பாஜகவின் முக்கிய தலைவரான சசிகலா புஷ்பா மரியாதை செலுத்தினார்.
அப்போது அவரை சுற்றி அதிக அளவில் ஆண் நிர்வாகிகள் நின்று அவரை நெருக்கி தள்ளினார். அப்போது அவர் அருகில் நின்றுகொண்டிருந்த பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவர் சசிகலா புஷ்பாவை இடித்துக்கொண்டு வந்து அநாகரிகமாக நடந்துகொண்டார்.
இந்த நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சசிகலா புஷ்பாவுக்கு நேர்ந்தது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், பலரும் பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !