Tamilnadu
மாநில கல்விக் கொள்கை எப்போது வெளியிடப்படும்? .. அமைச்சர் பொன்முடி சொன்ன முக்கிய தகவல்!
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கட்சியாக இருந்தபோதில் இருந்தே தி.மு.க கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆட்சிக்கு வந்த பிறகும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகிறது.
மேலும் மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காகவும் குழு அமைத்து கல்வியாளர்களிடம் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட உள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நுண்ணுயிரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை வெள்ளி விழா விழாவில், அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, "தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பது குறித்த எழுத்துப்பூர்வமான கடிதத்தை ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கொடுத்துள்ளது.
ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்காருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விரைவில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும். முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பிரச்சார Mode-ல் இருக்கும் விஜய்; தமிழ்நாட்டின் பாதுகாப்புச் சக்தி திமுக” : எழிலன் நாகநாதன் பேட்டி!
-
இளம்பெண் மீது கார் ஏற்றிப் படுகொலை : சென்னையை உலுக்கிய கொடூரம்!
-
”தொடர்ந்து 2வது ஐபிஎல் கோப்பை… சாதனை படைத்த RCB.. தோனி, ரோகித் பட்டியலில் ரஜத் படிதார்” - முழு விவரம்!
-
“ரிசர்வ் வங்கி விதிமுறைகளை காரணம் காட்டி விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் த.வெ.க அரசு”: தங்கம் தென்னரசு!
-
”விஜயின் ஆட்சி '20 நாள் இருண்ட காலம்'.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு” : முரசொலி கடும் விமர்சனம்!