Tamilnadu
மாநில கல்விக் கொள்கை எப்போது வெளியிடப்படும்? .. அமைச்சர் பொன்முடி சொன்ன முக்கிய தகவல்!
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கட்சியாக இருந்தபோதில் இருந்தே தி.மு.க கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆட்சிக்கு வந்த பிறகும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகிறது.
மேலும் மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காகவும் குழு அமைத்து கல்வியாளர்களிடம் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட உள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நுண்ணுயிரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை வெள்ளி விழா விழாவில், அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, "தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பது குறித்த எழுத்துப்பூர்வமான கடிதத்தை ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கொடுத்துள்ளது.
ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்காருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விரைவில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும். முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்- திறந்து வைத்த CM MK Stalin
-
ரூ.150 கோடி முதலீடு - எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!