Tamilnadu
WhatsApp-ல் மனைவி அனுப்பிய புகைப்படம்.. திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கணவன் : நடந்தது என்ன ?
திண்டுக்கல் மாவட்டம், வட மதுரை அருகே உள்ள எட்டிக்குளத்துபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு வீரழகு என்ற பெண்ணுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்குக் குழந்தைகள் இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து வீரழகு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன் ஆனந்தின் செல்போன் வாட்ஸ் ஆப்பிற்கு மனைவி வீரழகு ஒரு புகைப்படம் அனுப்பியுள்ளார். இந்த படத்தில் வீரழகு வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும், நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். தன்னை இனிமேல் தேடி வர வேண்டாம் என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து ஆனந்தன் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் மனைவியை மீட்டுத்தரும்படி ஆனந்த் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மனைவி மீது முதல் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!
-
“நீட் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக” : பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி? - “தூய்மையான அரசியலுக்கு உகந்துதானா?” - விசிக MP ரவிக்குமார் கேள்வி!
-
மீண்டும் மீண்டும் மக்களை அவதிக்குள்ளாக்கும் த.வெ.க : வரவேற்பு கொண்டாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்!
-
“இன்று மகளிரின் நம்பிக்கையாக திகழும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” : முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!