Tamilnadu
சுதந்திர தினத்தில் பொதுமக்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த Surprise Gift.. அது என்ன தெரியுமா?
நாடு முழுவதும் இன்று 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லியில் செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.
அதேபோல் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தலைமைச் செயலக்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். இதேபோல் மற்ற மாநில முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர்கள் என பலரும் தேசியக் கொடியை ஏற்றி விடுதலை போராட்டத்தில் வீர மரணம் அடைந்த தியாகிகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்களுக்கு ஆட்டோ சேவை இலவசம் என அறிவித்து இயக்கி வருவது அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஒட்டி வருகின்றார். இவர் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் பொதுமக்கள் ஆட்டோவில் இலவசம் அழைத்துச் சென்று வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைக்கப் போராடிய வீரர்களை நினைவும் கூறும் வகையில் இதைச் செய்வதாகத் தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் இந்த தேசப்பற்று அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
Also Read
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!
-
தொகுதி மறுவரையறை : தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!