Tamilnadu
Chess Olympiad வென்ற அணிக்கு முதல்வர் கொடுத்த ஆச்சர்யம் : ஒன்றிய அரசுக்கு முன் சொல்லி அடித்த தமிழக அரசு !
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் சென்னையில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழா ஜூலை 28 நடைபெற்ற நிலையில், நிறைவு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யானதன், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இதில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி கோப்பைகளை வழங்கி கெளரவித்தார். இதனிடையே தமிழர்களின் தொன்மைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் விதமாக மேடையில் விளையாட்டுகள், கலைகள், வரலாறுகள் என்று பல இடம்பெற்றது. இதனை அங்கு வந்த பார்வையளர்கள் மகிழ்ச்சியாக கண்டுகளித்தனர்.
முன்னதாக நேற்று நடைபெற்ற செஸ் போட்டித்தொடரின் 11 -வது சுற்று போட்டியில், ஓபன் பிரிவில் இந்திய 'B' அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. மேலும் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அர்மீனியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
அதோடு மகளிர் பிரிவில் இந்திய 'A' அணி தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெண்கலம் வென்றுள்ளது. மேலும் உக்ரைன் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
மேலும் தனி நபர் பிரிவில் இந்திய வீரர்கள் குகேஷ் மற்றும் நிகல் சரின் தங்கம் வென்று சாதனைப்படைத்த நிலையில், அர்ஜுன் எரிகேசி வெள்ளிப் பதக்கம் வென்றார். அதோடு வைஷாலி, பிரக்ஞானந்தா, திவ்யா தேஷ்முக், தானியா சச்தேவ் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை செய்தனர்.
இந்த நிலையில், பதக்கங்கள் வென்ற 2 இந்திய அணிகளுக்கு (மகளிர் பிரிவில் இந்திய 'A' அணி, ஓபன் பிரிவில் இந்திய 'B' அணி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.
இந்த பரிசுத்தொகையானது இந்திய ஓபன் பிரிவில் இந்திய 'B' அணியில் விளையாடிய தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன் பாஸ்கரன் உட்பட கேரளாவை சேர்ந்த நிகல் சரின், மகாராஷ்டிராவை சேர்ந்த ராணக் சத்வானி ஆகிய 5 பேருக்கு கிடைத்துள்ளது.
மேலும் மகளிர் பிரிவில் இந்திய 'A' அணியில் விளையாடிய தமிழக வீரங்கனையான வைஷாலி, ஹரிகா துரோணவல்லி, கொனேரு ஹம்பி, தனியா சச்தேவ் ஆகியோருக்கும் கிடைத்துள்ளது.
Also Read
-
‘வந்தே மாதரம்’ பாடலை முழுவதும் பாடச்சொல்வது மதவெறியின் உச்ச அக்கிரமம்: தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்!
-
“பிரிவினைக்கு இடம் கொடுக்காமல், அன்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம்!” : வள்ளலார் விழாவில் முதல்வர் உரை!
-
இனி சென்னை மத்திய கைலாஷில் நெரிசல் இல்லை..! - ரூ.60.68 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் திறப்பு!
-
ஈரோட்டில் ‘நொய்யல்’ - இராமநாதபுரத்தில் ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல்! : ரூ.68 கோடி ஒதுக்கீடு!
-
ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!