Tamilnadu
6 நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல் - selfie எடுக்கும்போது அருவியில் விழுந்த இளைஞர் !
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவ மழை காரணமாக தென்மாவட்டங்களில் உள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த அஜய் பாண்டியன் (வயது 28) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவியில் நண்பர்களுடன் சேர்ந்து ஈரமான பாறையின் மேல் ஏறி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் எதிர்ப்பாராத விதமாக பாறை வழுக்கி அருவியின் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கதறியுள்ளனர். இதையடுத்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர்கள் விரைந்து வந்து அஜய் பாண்டியனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் எவ்வளவு தேடியும் அஜய்யின் உடல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அஜய் பாண்டியனின் உடலை தொடர்ந்து 6 நாட்களாக தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள மீனாட்சி ஓடை என்ற இடத்தில் அஜய்யின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அஜய் பாண்டியன் அருவியில் விழும் வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !
- 
	    
	      ”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!