Tamilnadu
"அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே வன்முறை நடந்துள்ளது".. ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் பள்ளியில் இன்று அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் வன்முறையின் போது காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் போலிஸாரையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர்கள் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தனர். பிறகு அமைச்சர்கள் மூன்று பேரும் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "மாணவி மரணமடைந்த மறுநாளே அமைச்சர் சி.வி.கணேசன் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டபோதும் மாணவர்கள், பெற்றோருக்களை போலிஸார் பாதுகாத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்ட தகவலால்தான் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் 67 வாகனங்கள், 48 இருசக்கர வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளது. 108 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர்
மேலும் 3000 மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது. நியாயம் கேட்கப் போனவர்கள் இதுபோன்ற செயல்களிலா ஈடுபடுவார்கள். ஜனநாயக முறையில் போராட நினைத்திருந்தால் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கலாம்.
நாளை மாணவியின் குடும்பத்தினர் வந்தவுடன் உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளது. மாணவியின் பெற்றோரின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். அரசுக்கு சில கெட்டப் பெயர்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனே இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 288 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் கைது நடவடிக்கை தொடரும். நாளை முதலமைச்சரைச் சந்தித்து இந்த வன்முறை சம்பந்தமாகத் தகவல் தெரிவிக்க இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!
-
அண்ணா திராவிட கழகமாக மாறும் தமிழக வெற்றிக் கழகம்.. குதிரை பேரம் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜய்?
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!