Tamilnadu
உணவுப் பாதுகாப்பு துறைக்கு வந்த புகார்.. தரமற்ற உணவு தயாரித்த பிரபல ஹோட்டலை இழுத்து மூடிய அதிகாரிகள்!
திருப்பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள பிரபல தனியார் அசைவ உணவகத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த அப்பா- மகன் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா உத்தரவின் பெயரில், திருப்பெரும்புதூர் உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர் செந்தில்குமார் தனியார் உணவகத்தை ஆய்வு மேற்கொண்டார்.
இதில், உணவகத்தின் சமையலறை மற்றும் உணவு செய்யும் விதம் இறைச்சி வைக்கும் பிரிசர் பாக்ஸ் என அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்ததால் அந்த உணவகத்தை இரண்டு நாட்களுக்கு மூட உத்தரவிட்டார். மேற்கண்ட குறைபாடுகள் சரி செய்த பிறகே உணவகத்தை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பிரபல தனியார் உணவகத்தை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து இரண்டு நாட்களுக்கு மூட செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“Online, Offline இண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!