Tamilnadu
வங்கி மேனேஜர் கொடுத்த பகீர் புகார்.. கார் லோன் வாங்கி நூதன மோசடி.. 2 பேரை கைது செய்து போலிஸ் விசாரணை!
கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் ஒரு வங்கியின் கிளை உள்ளது. அதன் மேலாளர் வினோத்குமார். அதே ஊரைச் சேர்ந்தவர்கள் ஹபீப் ரகுமான் (41). பேன்சி ஸ்டோர் வியாபாரம் செய்து வருகிறார். கிருஷ்ணவேல் ( 36) ஒரு கார் விற்பனை நிலையத்தில் விற்பனையாளராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் வங்கி மேலாளர் வினோத்குமார் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப்புகாரில், ஹபீப் ரகுமான் தங்களது வங்கியில் 4 சக்கர வாகன கடன் ரூ 4 லட்சத்து 47 ஆயிரம் வாங்கி, கிருஷ்ணவேல் உதவியுடன் கார் வாங்கினார்.
கடன்தொகை திரும்ப செலுத்தி வந்தார். கடன்தொகை நிலுவையில் உள்ள நிலையில் ஹபீப் ரகுமானும் கிருஷ்ணவேலும் வங்கி மேலாளரின் கையெழுத்தை போட்டு, அரவக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் கொடுத்து மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த புகாரின்பேரில் போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். ஹபீப் ரகுமான், கிருஷ்ணவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!