Tamilnadu
15 திருமணம்.. 2 கொலை.. 8 ஆண்டுகள் தலைமறைவு : கொலையாளியை சிக்க வைத்த சிக்கன் பக்கோடா : சிக்கியது எப்படி?
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் குணசுந்தரி. கணவனை இழந்த இவருக்கு 7 வயதில் மகன் ஒருவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த ராஜா என்பவரை குணசுந்தரி இரண்டாவது திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவருக்கு ஏற்பட்ட கருத்துவேறு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததாகவும், இதில் ஒரு கட்டத்தில் சுந்தரிமீது சந்தேகம் அடைந்த ராஜா, அவரையும், அவரது 7 வயது மகனையும் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
பின்னர் போலிஸார் வழக்குப்பதிவுசெய்து குற்றவாளி ராஜாதான் என்பதனை உறுதி செய்தனர். மேலும் புதுவண்ணாரப்பேட்டை போலிஸார் தனிப்படை அமைத்து ராஜாவைத் தேடிவந்தனர். ஆனால் கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராஜா, தலைமறைவாக இருந்து வந்தார். இதனிடையே தொடர்ந்து நடத்தி வந்த விசாரணையில் ராஜா சுந்தரி உட்பட 15 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், ஆந்திரா மாநிலம் சத்தியவேடு பகுதியில் உள்ள ஒரு சிக்கன் பக்கோடா கடைக்கு ராஜா அடிக்கடி வருவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாறுவேடத்தில் சென்ற போலிஸார் , 8 ஆண்டுகளுக்குப் பிறகு கொலைக் குற்றவாளியான ராஜாவை சுற்றிவளைத்து கைது செய்தனர். போலிஸார் ராஜாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!