Tamilnadu
கோழிக்கறியில் வெடிமருந்து தடவி விலங்குகளை வேட்டையாட முயற்சி: வனத்துறையிடம் இருவர் வசமாக சிக்கியது எப்படி?
கோழி இறைச்சியில் வெடிமருந்து தடவி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஒருவர் கைது. ஒருவர் தப்பி ஓட்டம்.
திருவண்ணாமலை அடுத்த சொரகுளத்தூர் காப்புக்காட்டில் இரவு நேரங்களில் மான், பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டு விற்கப்படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி, திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் நேற்று இரவு வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது கோழி இறைச்சியில் வெடிமருந்து தடவி வனவிலங்குகளை வேட்டையாட தயாராக இருந்த கொண்டம் பகுதியைச் சேர்ந்த ராமு மற்றும் ஜான்சன் ஆகியோரை வனத்துறையினர் மடக்கி பிடிக்க முயற்சித்த போது ஜான்சன் என்ற நபர் தப்பி ஓடி அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் மறைந்தார்.
பின்னர் ராமுவை கைது செய்த வனத்துறையினர், வேட்டையாட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் தப்பி ஓடிய ஜான்சனை தீவிரமாக தேடியும் வருகின்றனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!