Tamilnadu
சக நண்பர்கள் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்.. ஏரிக்கு சென்ற இடத்தில் நடந்த சோகம்!
சென்னை தாம்பரம் அடுத்த கோவிலாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடய மனைவி ரங்கனாயகி. இவர்களுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். சூர்யா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று பள்ளி விடுமுறை என்பதால், தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது சூர்யா ஆழமான பகுதியில் குளிக்க சென்றதால் நீரில் மூழ்கினார்.
இதனை கண்ட சகநண்பர்கள் கூச்சலிட்டதால் சம்பவ இடத்தில் கூடிய அப்பகுதி மக்கள் தீயனைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி ஏரியில் இறந்த நிலையில் இருந்த சூர்யாவின் உடலை மீட்டனர்.
தகவல் அறிந்து வந்த சேலையூர் போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!
-
“உயர்கல்வித்துறை சார்பில் ரூ.542.02 கோடியில் புதிதாக 15 கட்டடங்கள் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!