Tamilnadu
விஷ நெடியுடன் மதுபாட்டில் விற்பனை.. திருவள்ளூர் அதிமுக நிர்வாகியை வலைவீசி தேடும் போலிஸார்!
சட்டவிரோதமாக விஷ நெடியுடன் கூடிய மதுபாட்டில்களை விற்ற திருவள்ளூர் அதிமுக நகர செயலாளரும் நகர்மன்ற உறுப்பினரான கந்தசாமியை போலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் அதிமுக நகர செயலாளர் கந்தசாமிக்கு சொந்தமான கட்டிடத்தில் சட்டவிரோதமாக விஷத்தன்மையுள்ள மதுபாட்டில் விற்கப்படுவதாக மணவாள நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலிஸார் சோதனை மேற்கொண்டர். அப்போது அங்கு விஷத்தன்மையுள்ள மது பாட்டில்களை வைத்து விற்று வந்திருந்த காளிதாஸ் (33), சேவியர் (48) ஆகிய இருவரை மணவாளநகர் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 20 ஆயிரம் மதிப்புள்ள 144 மது பாட்டில்களை போலிஸார் பறிமுதல் செய்தனர்.
விஷத்தன்மையுள்ள மது பாட்டில்களை சட்ட விரோதமாக தனது கட்டடத்தில் வைத்து விற்க அனுமதி கொடுத்த அதிமுக நகர செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான கந்தசாமி உட்பட 2 பேரை போலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கந்தசாமி மீது கூட்டுறவு சங்கத் தலைவராக செயல்பட்டு வந்திருந்தபோது மோசடி வழக்கில் அவர் மீது வணிகவரி குற்றப்புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் அண்மையில் முன்ஜாமீன் பெற்ற அவர் மீது மேலும் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்க இடமளித்தது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!