Tamilnadu
நடைபயிற்சியின்போது தொழிலதிபரை கடத்திய கும்பல்.. 3 மணி நேரத்தில் மீட்ட வத்தலகுண்டு போலிஸ் - 7 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். இவர் பெரியகுளம் சாலையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். சில நாட்களாக இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை நடைபயிற்சியில் இருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அன்புச்செழியனைக் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போலிஸார் அப்பகுதியில் ஆய்வு செய்து, கடத்தல்காரர்களைக் கைது செய்ய உடனே தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலிஸார் ஈடுபட்டனர். அப்போது மதுரை காரியாபட்டியில் உள்ள ஒரு வீட்டில் அன்புச்செழியன் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனே அங்கு சென்ற போலிஸார் கடத்தல்காரர்களிடம் இருந்து அன்புச்செழியனை மீட்டனர். பிறகு கடத்தலில் ஈடுபட்ட வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, சிவா, பிரபாகரன், வடிவேல், மணி ஆகியோரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் தொழில் போட்டி காரணமாக வெள்ளைச்சாமி என்பவரின் ஆலோசனைப்படியே அன்புச்செழியன் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து வெள்ளைச்சாமியையும் போலிஸார் கைது செய்தனர். தொழிலதிபர் கடத்தப்பட்ட 3 மணி நேரத்திலேயே மீட்ட போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!