Tamilnadu
“50 ஆயிரம் கொடுத்தா போதும்.. ஷார்ப்பா வேலை முடியும்” : சிக்கிய அதிகாரிகள் - துப்பு துலங்கியது எப்படி ?
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஈஸ்வரன் என்பவர் பட்டா பெயர் மாற்றம் மற்றும் பட்டாவில் பெயர் நீக்கம் செய்வதற்காக மனு செய்ததாகவும், அதற்கு கிராம நிர்வாக அதிகாரியாக உள்ள விஜயன் ஐம்பதாயிரம் ரூபாய் கையூட்டு கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈஸ்வரன் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தன் அடிப்படையில், தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் கருப்பையா மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ஜெயப்பிரியா தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயன பவுடர் தடவிய ஐம்பதாயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பியதின் அடிப்படையில், கிராம நிர்வாக அதிகாரியின் நண்பரான இளமுருகனிடம் கொடுத்த பின்பு அந்த பணத்தை இளமுருகன் கிராம நிர்வாக அலுவலர் விஜயனிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் விஜயன் மற்றும் அவரது நண்பர் இளமுருகன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கிராம நிர்வாக அலு வலகத்தில் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய பின்பு அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!