Tamilnadu
ஏ.டி.எம் டெபாசிட் மெஷினில் கள்ளநோட்டு செலுத்திய பெண்? விசாரணையில் வெளியான பகீர் கிளப்பும் தகவல்!
சென்னையை அடுத்த நந்தம்பாக்கம், மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் செலுத்தும் கருவியில் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டு 28 தாள்களை கொண்ட கள்ள நோட்டு டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாக வங்கி மேலாளர் லதா நந்தம்பாக்கம் போலிஸிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
அதன் பேரில் நந்தம்பாக்கம் போலிஸார் விசாரணை நடத்தியதில், பணம் செலுத்திய பரங்கிமலையை சேர்ந்த எப்ஸி (28) என தெரியவந்தது. தனியார் கிரெடிட் கார்டு தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றும் எப்ஸியிடம் போலிஸார் விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது வங்கி ஏ.டி.எம்மில் பணத்தை செலுத்த சென்ற போது ஒருவர் வந்து ரூ.14 ஆயிரத்தை கொடுத்து இதனை வங்கியில் செலுத்தி விட்டு தனக்கு ஆன்-லைனில் பணத்தை அனுப்ப வேண்டும் என கூறினார்.
ஆனால் செலுத்திய பணம் எனது கணக்கிற்கு வராததால் பணம் அனுப்பவில்லை என கூறினார். இதையடுத்து பணம் கொடுத்தது யார் என விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!