Tamilnadu
“எந்த துறையிடம் என்ன கேள்வி கேட்பதென்றே தெரியாமல்..” : வானதி சீனிவாசனுக்கு சபாநாயகர் பதிலடி!
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியது. இன்று நகராட்சி பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பொன்முடி ஆகியோர் பதிலளித்தனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது விவாதத்தின் மீது பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவை மாவட்டத்தில் பூங்கா அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்றைய விவாதம் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையை சார்ந்து உள்ள நிலையில் வானதி சீனிவாசனின் இத்தகைய கேள்விக்கு உடனே தலையீட்ட சபாநாயகர் அப்பாவு, மூலக் கேள்விக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து உரிய அமைச்சரிடம் இதுதொடர்பாக கேளுங்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில் எந்த துறையிடம், எந்த கேள்வி கேட்பதென்றே தெரியாமல் பா.ஜ.க எம்.எல்.ஏ இருப்பதாகவும் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !