Tamilnadu
சாக்லேட் கடையில் திடீர் சோதனை: மூட்டை மூட்டையாக பிடிபட்ட 300 கிலோ குட்கா, ஹான்ஸ்; ராணிப்பேட்டையில் அதிரடி
சாக்லேட் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான 300 கிலோ ஹான்ஸ், குட்கா பறிமுதல் - கடை உரிமையாளர் உட்பட இருவர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே சாக்லேட் விற்பனை செய்யும் கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்த வாலாஜாப்பேட்டை போலிஸார் கடையின் உரிமையாளர் உட்பட இருவரை கைது செய்தனர்.
வாலாஜாபேட்டையில் உள்ள நரசுஜிராவ் தெருவில் சாக்லேட் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா விற்பனை நடைபெறுவதாக DSP பிரபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் வாலாஜாபேட்டை போலிஸார் சாக்லேட் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான, 300 கிலோ ஹான்ஸ், குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கடையின் உரிமையாளர் ஜீவாராம்(21) மற்றும் உதவியாளர் காலூசிங்(31) ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!