Tamilnadu
6 மாதமாக போலிஸாருக்கு தண்ணி காட்டி வந்த முகமூடி கொள்ளையன்.. ரோந்து போலிஸாரிடம் சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட குளச்சல், கருங்கல், நித்திரவிளை, கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏ.டி.எம் மையங்கள் மற்றும் நகைக்கடைகள் என பல்வேறு இடங்களில் முகமூடி அணிந்த நபர்கள் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த கொள்ளையர்களைப் பிடிக்க கடந்த ஆறு மாதமாக போலிஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். மேலும் இந்த மர்ம கும்பல் கொள்ளை அடித்துவிட்டு கேரளாவிற்குத் தப்பிச் சென்று விடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கும் தனிப்படை போலிஸார் தேடிவந்தனர்.
இந்நிலையில் கொல்லங்கோடு பகுதியில் போலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலிஸார் காவல்நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை செய்தபோது. மேலும் அவரது இருசக்கர வாகனத்தில் நகைகள் இருந்ததால் அதுகுறித்து விசாரித்தபோது அது திருடி எடுத்து வரப்பட்டது என்பது தெரிந்தது.
இதையடுத்து மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் இந்த நபர்தான் ஏ.டி.எம் மற்றும் நகைக்கடைகளில் முகமூடி அணிந்து கடந்த ஆறு மாதமாகத் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், இந்த முகமூடி நபர் வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த ஷாலு என்பதும் இவரது நண்பர் மிதினுடன் சேர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள மிதினை போலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!