Tamilnadu
வரி கட்டாததால் ஜப்தி.. சென்னையில் பிரபல தியேட்டர் மீது பெருநகர மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!
சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத பிரபல திரையரங்கில் சீல் வைத்து ஜப்தி செய்தது சென்னை பெருநகர மாநகராட்சி.
2021 - 22ம் நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என்றும் கட்ட தவறியவர்களுக்கு வட்டி விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் பல ஆண்டுகளாக சொத்து வரியையும் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததாகவும் சென்னை பெருநகர மாநகராட்சி தரப்பில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாத காரணத்தினால், திரையரங்குக்கு சீல் வைத்து ஜப்தி செய்து இருக்கிறது பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம்.
அதன்படி 51 லட்சத்து 22 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து வரியும், 14 லட்சம் ரூபாய் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன் படி ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!