Tamilnadu
காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது.. போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி மாணவி தனியாக நடந்து சென்றபோது, கீழ்விலாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகனான 23 வயதாகும் இளைஞர் திருமலை சிறுமியை வழிமறித்து வம்பிழுத்துள்ளார்.
மேலும், தன்னை காதலிக்கக்கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். அதோடு இல்லாமல், தன்னைக் காதலிக்கவில்லை என்றால், கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுகொண்ட போலிஸார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, சிறுமிக்குக் காதல் தொல்லைக் கொடுத்த இளைஞர் திருமலையைக் கைது செய்து விசாரித்து வருகிறார்.
Also Read
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!
-
”வாக்கு திருடர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்” : மீண்டும் ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!