Tamilnadu
காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது.. போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி மாணவி தனியாக நடந்து சென்றபோது, கீழ்விலாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகனான 23 வயதாகும் இளைஞர் திருமலை சிறுமியை வழிமறித்து வம்பிழுத்துள்ளார்.
மேலும், தன்னை காதலிக்கக்கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். அதோடு இல்லாமல், தன்னைக் காதலிக்கவில்லை என்றால், கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுகொண்ட போலிஸார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, சிறுமிக்குக் காதல் தொல்லைக் கொடுத்த இளைஞர் திருமலையைக் கைது செய்து விசாரித்து வருகிறார்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!