Tamilnadu
டி.ராஜேந்தரின் கார் ஏறி ஒருவர் பலி.. அதிர்ச்சி கிளப்பும் CCTV காட்சி - நடந்தது என்ன?
சாலையின் குறுக்கே தவழ்ந்து சென்றவர் மீது நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் கார் ஏறியதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலையில் தவழ்ந்தபடி சாலையைக் கடக்க முயன்ற தனியார் நிறுவன காவலாளியான முனுசாமி (50) என்பவர் மீது கார் ஏறியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவர் நடக்க முடியாத நிலையில் இருந்ததாகவும், அதனால் அவர் தவழ்ந்தபடி சாலையைக் கடக்க முயன்றதாகவும் தெரியவந்துள்ளது.
அவர் சாலையைக் கடக்க முயன்றபோது வந்த கார் அவர் மீது ஏறியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய கார் டி.ராஜேந்தருக்கு சொந்தமானது என்றும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான சிசிடி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்தபோது, காரில் டி.ராஜேந்தரின் குடும்பத்தினர் இருந்ததாகவும், விபத்தை ஏற்படுத்தியது டி.ஆரின் ஓட்டுநர் செல்வம் எனவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் செல்வம் மீது பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!