Tamilnadu
“சாவடிச்சுருவேன் உன்ன.. விடிஞ்சா நீ இருக்கமாட்ட” : SSI-யை மிரட்டிய ரவுடியை தூக்கி உள்ளே வைத்த போலிஸ்!
சீர்காழியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தவரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டாரக பணியாற்றி வருபவர் அர்ஜுனன் (48). இவர் ஸ்டேஷன் பணியில் இருந்தபோது மணிமாறன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தைக்கால் மதகடி தெருவை சேர்ந்த செந்தில் என்கிற கலைவாணனை விசாரணைக்கு அழைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கலைவாணன் செல்போனில் தொடர்பு கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனனை தகாத வார்த்தைகளால் திட்டி தான் ஒரு ரவுடி என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அப்போது, “உங்களுக்கு பசங்கல்லாம் இருக்கா? தேவையில்லாம ரிஸ்க் எடுக்கவேண்டாம். நல்லதில்ல. புள்ள குட்டிங்களோட இருக்க... ஒழுங்கா பாத்து இரு. சாவடிச்சு போட்டுருவேன் உன்ன.. விடிஞ்சா நீ இருக்கமாட்ட..” என்கிற ரீதியில் மிரட்டியுள்ளார்.
இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதையடுத்து சீர்காழி போலிஸார் கலைவாணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் போலிஸுக்கு மிரட்டல் விடுத்த ரவுடியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கலைவாணன் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்இன்ஸ்பெக்டர் அசோக், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் மற்றும் போலிஸார் விரைந்து சென்று மிரட்டல் விடுத்த கலைவாணனை கைது செய்தனர். அவரின் மேல் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !