Tamilnadu
“சாவடிச்சுருவேன் உன்ன.. விடிஞ்சா நீ இருக்கமாட்ட” : SSI-யை மிரட்டிய ரவுடியை தூக்கி உள்ளே வைத்த போலிஸ்!
சீர்காழியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தவரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டாரக பணியாற்றி வருபவர் அர்ஜுனன் (48). இவர் ஸ்டேஷன் பணியில் இருந்தபோது மணிமாறன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தைக்கால் மதகடி தெருவை சேர்ந்த செந்தில் என்கிற கலைவாணனை விசாரணைக்கு அழைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கலைவாணன் செல்போனில் தொடர்பு கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனனை தகாத வார்த்தைகளால் திட்டி தான் ஒரு ரவுடி என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அப்போது, “உங்களுக்கு பசங்கல்லாம் இருக்கா? தேவையில்லாம ரிஸ்க் எடுக்கவேண்டாம். நல்லதில்ல. புள்ள குட்டிங்களோட இருக்க... ஒழுங்கா பாத்து இரு. சாவடிச்சு போட்டுருவேன் உன்ன.. விடிஞ்சா நீ இருக்கமாட்ட..” என்கிற ரீதியில் மிரட்டியுள்ளார்.
இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதையடுத்து சீர்காழி போலிஸார் கலைவாணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் போலிஸுக்கு மிரட்டல் விடுத்த ரவுடியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கலைவாணன் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்இன்ஸ்பெக்டர் அசோக், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் மற்றும் போலிஸார் விரைந்து சென்று மிரட்டல் விடுத்த கலைவாணனை கைது செய்தனர். அவரின் மேல் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!
-
பீரோவைத் திறந்தபோது... துணிகளுக்கு இடையே 3 அடி நாகப்பாம்பு!