Tamilnadu
சமையல் கேஸ் மானியத்தில் ரூ.19.88 லட்சத்தை சுருட்டிய திருவள்ளூர் அதிமுக நிர்வாகி; மூவருக்கு வலைவீச்சு!
திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலையின் கீழ் ஊத்துக்கோட்டையில் உள்ள பாரத் எரிவாயு சிலிண்டர் மையம் இயங்கி வருகிறது.
இந்த மையத்தில் கடந்த 2013-2017ஆம் ஆண்டுகளில் பொது மக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட கேஸ் சிலிண்டர் மானியத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட துணை பதிவாளர் காத்தவராயன் வணிகவியல் குற்றப்புலனாய்வு போலிஸாருக்கு புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வணிகவியல் குற்றப் புலனாய்வு போலிஸார் ஊத்துக்கோட்டையில் உள்ள பாரத் கேஸ் சிலிண்டர் விநியோகம் மையத்தில் ஆய்வு மேற்கொண்டதில், 2013 -2017 ஆம் ஆண்டுகளில் பொது மக்கள் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கேஸ் சிலிண்டரில் மானியத்தில் 19 லட்சத்து 88 ஆயிரத்து 294 ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கண்டறிந்தனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட திருவள்ளூர் அதிமுக நகர செயலாளரும் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான கந்தசாமி உட்பட நான்கு பேர் மீது வணிகவியல் குற்ற புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அவர்களை தேடிவந்த நிலையில் கேஸ் எரிவாயு மையத்தின் இளநிலை உதவியாளர் எழிலரசனை வணிகவியல் குற்றப்பிரிவு சுற்றி வளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள கூட்டுறவு சங்கத் தலைவரும் அதிமுக நிர்வாகி கந்தசாமி, லட்சுமி, ஆனந்தன் ஆகிய 3 பேரையும் வணிகவியல் குற்ற புலனாய்வு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!