Tamilnadu
நாயின் வயிற்றுக்குள் இருந்த துப்பாக்கி குண்டு.. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி: பகீர் சம்பவம் என்ன?
சென்னை அடுத்த சித்தலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தனது வீட்டில் நாட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி நாயின் உடல் பகுதியில் காயம் இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் ஏங்காவது கம்பியில் கிழித்துக் கொண்டிருக்கும் என முதலில் நினைத்துள்ளார்.
ஆனால் நாயின் உடலிலிருந்து ரத்தம் நிற்காமல் வெளியே வந்து கொண்டிருந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு நாயை கூட்டிச்சென்றார். அங்கு நாயை பரிசோதனை செய்து ஸ்கேன் எடுத்து பார்த்தபோது துப்பாக்கிக் குண்டு இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் அறுவை சிகிச்சை செய்து நாயின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டை வெளியே எடுத்துள்ளனர். மேலும் நாய் மீது மர்ம நபர்கள் யாரோ துப்பாக்கி சூடு நடத்தியது தெரியவந்துள்ளது. இது குறித்து ஸ்ரீதர் பெரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் மீது போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!