Tamilnadu
நாயின் வயிற்றுக்குள் இருந்த துப்பாக்கி குண்டு.. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி: பகீர் சம்பவம் என்ன?
சென்னை அடுத்த சித்தலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தனது வீட்டில் நாட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி நாயின் உடல் பகுதியில் காயம் இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் ஏங்காவது கம்பியில் கிழித்துக் கொண்டிருக்கும் என முதலில் நினைத்துள்ளார்.
ஆனால் நாயின் உடலிலிருந்து ரத்தம் நிற்காமல் வெளியே வந்து கொண்டிருந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு நாயை கூட்டிச்சென்றார். அங்கு நாயை பரிசோதனை செய்து ஸ்கேன் எடுத்து பார்த்தபோது துப்பாக்கிக் குண்டு இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் அறுவை சிகிச்சை செய்து நாயின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டை வெளியே எடுத்துள்ளனர். மேலும் நாய் மீது மர்ம நபர்கள் யாரோ துப்பாக்கி சூடு நடத்தியது தெரியவந்துள்ளது. இது குறித்து ஸ்ரீதர் பெரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் மீது போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!