Tamilnadu
“மகனுக்கு மஞ்சள் நீராட்டு விழா” : தாய் தந்தையின் நெகிழவைத்த செயல் - குவியும் பாராட்டு!
விருத்தாசலத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு பெற்றோர்களே மஞ்சள் நீராட்டு விழா நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வசிக்கும் கொளஞ்சி-அமுதா எனும் தம்பதியினரின் மகன் நிஷாந்த் (21). இவரது தந்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாகவும், அவரது தாய் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நிஷாந்த் டிப்ளமோ கேட்ரிங் முடித்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவரது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் கண்டித்துள்ளனர்.
இதையடுத்து அவர் வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சமடைந்துள்ளார். இதையறிந்த அவரது பெற்றோர் சமரசம் செய்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்து, உணர்வுக்கு மதிப்பளித்து, மகனின் பெயரை நிஷா என மாற்றியுள்ளனர்.
பின்னர் அவருக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது முழுமையான திருநங்கையாக நிஷா மாறியுள்ளார்.
அவர் வீட்டை வெளியேறிய நாளான மார்ச் 1 அன்றே அவருக்கு இன்று மஞ்சள் நீராட்டு விழா நடத்தி மகிழ்வித்துள்ளனர். இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நிஷாவின் பள்ளி நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர். திருநங்கைக்கு குடும்பத்தினரே மஞ்சள் நீராட்டு விழா செய்திருப்பது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!