Tamilnadu
வாயிலில் நிறுத்தப்பட்ட R15 பைக்கை அலேக்காக தூக்கிய திருட்டு கும்பல்:ஒரே நாளில் கண்டுபிடித்த சென்னை போலிஸ்
சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியைச் சேர்ந்த ராஜாராமின் மகன் தினேஷ் (29). இவர் கடந்த பிப்ரவரி 24ம் தேதி இரவு தனது யமஹா R15 பைக்கை வீட்டின் வெளியே நிறுத்தியிருக்கிறார்.
மறுநாள் காலை பார்த்தபோது தினேஷின் பைக் களவாடப்பட்டிருப்பது தெரிய வந்திருக்க்கிறது. இதனையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்தில் பைக் திருடுபோனது குறித்தி புகாரளிக்கப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதன்படி மதுரவாயல் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் பைக் திருடப்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில் தினேஷின் பைக்கை மூவர் கொண்ட கும்பல் திருடிச் சென்றது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து சிசிடிவி காட்சியை வைத்து பைக் திருடர்களை தேடி வந்த நிலையில் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (19) என்ற இளைஞனை போலிஸாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்து தினேஷின் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் பைக் திருட்டுக்கு உடந்தையாக இருந்த மற்ற இருவர் தலைமறைவானதால் அவர்களை தேடும் பணியிலும் போலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்ட வெங்கடேஷை நீதிமன்றத்தின் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !