Tamilnadu
வாயிலில் நிறுத்தப்பட்ட R15 பைக்கை அலேக்காக தூக்கிய திருட்டு கும்பல்:ஒரே நாளில் கண்டுபிடித்த சென்னை போலிஸ்
சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியைச் சேர்ந்த ராஜாராமின் மகன் தினேஷ் (29). இவர் கடந்த பிப்ரவரி 24ம் தேதி இரவு தனது யமஹா R15 பைக்கை வீட்டின் வெளியே நிறுத்தியிருக்கிறார்.
மறுநாள் காலை பார்த்தபோது தினேஷின் பைக் களவாடப்பட்டிருப்பது தெரிய வந்திருக்க்கிறது. இதனையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்தில் பைக் திருடுபோனது குறித்தி புகாரளிக்கப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதன்படி மதுரவாயல் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் பைக் திருடப்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில் தினேஷின் பைக்கை மூவர் கொண்ட கும்பல் திருடிச் சென்றது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து சிசிடிவி காட்சியை வைத்து பைக் திருடர்களை தேடி வந்த நிலையில் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (19) என்ற இளைஞனை போலிஸாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்து தினேஷின் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் பைக் திருட்டுக்கு உடந்தையாக இருந்த மற்ற இருவர் தலைமறைவானதால் அவர்களை தேடும் பணியிலும் போலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்ட வெங்கடேஷை நீதிமன்றத்தின் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!