Tamilnadu
2 ஆண்டுகளுக்குப் பிறகு மழலையர் பள்ளிகள் திறப்பு.. மாணவர்களை மகிழ்ச்சியாக வரவேற்ற ஆசிரியர்கள்!
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் அண்மையில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது அடுத்து இன்று முதல் மழலையர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை தொடக்க பள்ளியில் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து குழந்தைகள் பள்ளிக்கு வந்த குழந்தைகளை பள்ளி வளாகத்தின் முகப்பில் ஆசிரியர்கள் பூக்களை கொடுத்து வரவேற்றனர். பெற்றோர்களும் ஆர்வம் குறையாமல் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
அதேபோல், அனைத்து மாணவ, மாணவிகள், குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சானிடைசர் தெளிக்கப்பட்டும், உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி வழிகாட்டு நெறிமுறைகளை உடன், பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை பின்பற்றி ஆசிரியர்கள் குழந்தைகளை வரவேற்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!