Tamilnadu

குட்கா கடத்திய பா.ஜ.க நிர்வாகி கைது... போலிஸாரிடம் சிக்கியது எப்படி?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு போலிஸார் தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்தபோது 3.8 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள் இருந்தை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது பா.ஜ.க கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் இருந்த குட்கா பொருளைப் பறிமுதல் செய்தனர். பா.ஜ.க நிர்வாகி தடைசெய்யப்பட்ட போதை பொருளை கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “தி.மு.க பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர் கைது” : போலிஸ் தீவிர விசாரணை - பின்னணி என்ன?