Tamilnadu
குட்கா கடத்திய பா.ஜ.க நிர்வாகி கைது... போலிஸாரிடம் சிக்கியது எப்படி?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு போலிஸார் தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்தபோது 3.8 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள் இருந்தை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது பா.ஜ.க கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் இருந்த குட்கா பொருளைப் பறிமுதல் செய்தனர். பா.ஜ.க நிர்வாகி தடைசெய்யப்பட்ட போதை பொருளை கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!