Tamilnadu
குட்கா கடத்திய பா.ஜ.க நிர்வாகி கைது... போலிஸாரிடம் சிக்கியது எப்படி?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு போலிஸார் தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்தபோது 3.8 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள் இருந்தை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது பா.ஜ.க கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் இருந்த குட்கா பொருளைப் பறிமுதல் செய்தனர். பா.ஜ.க நிர்வாகி தடைசெய்யப்பட்ட போதை பொருளை கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மே 7.. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று ஒலித்த குரலால் மின்னும் தமிழ்நாடு - வீடியோ வைரல்!
-
நீலகிரி வரையாடு பாதுகாப்பு: வரலாற்று சிறப்புமிக்க முன்னோடித் திட்டம் -முதலமைச்சருக்கு The Print பாராட்டு!
-
“துள்ளி எழுந்த பள்ளிக்கல்வித்துறை.. இதுதான் மிகப்பெரிய சாதனை” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!