Tamilnadu
நடத்தையில் சந்தேகம்.. பெண்ணை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது: கிருஷ்ணகிரி அருகே பகீர் சம்பவம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், சோழார அள்ளியைச் சேர்ந்தவர் பார்வதி. இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அதேபகுதியைச் சேர்ந்த மனைவியை இழந்த முருகன் என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் முருகன் இல்லாத நேரத்தில் வேறு சில ஆண்டுகள் வீட்டிற்கு வந்து செல்வதாகச் சிலர் அவரிடம் கூறியுள்ளனர்.
இதனால் பார்வதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இது குறித்துக் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டிலிருந்து கத்தியை எடுத்து முருகன், பார்வதியை அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டு மீனவர்கள் தடையின்றி கைது.. உடனே நடவடிக்கை வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழன் கங்கையை வெல்வான்! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி காரசார பேச்சு!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் Google Play, Unity Game Developer Program: அசத்தும் தமிழ்நாடு அரசு!
-
சமூகநீதிக்கான அரசியலையும் போராட்டத்தையும் நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு.. உங்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் கோவி. செழியன்!