Tamilnadu

விளைநிலத்தில் ‘களை’ எடுக்கும் போது நடந்த விபரீதம் - உழவு இயந்திரத்தில் சிக்கிய விவசாயி கொடூர மரணம்!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு (வயது 65). இவர் மணியாங்குறிச்சி சாலையோரத்தில் உள்ள வயலில் உழவு இயந்திரத்தை கொண்டு உழுது கொண்டிருந்தார்.

அப்பொழுது எந்திரத்தில் (ரொட்டேட்டர்) சில தாவரங்கள் சிக்கிக்கொண்டன. அதனை சுத்தம் செய்ய அவர் கீழே குனிந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த பனியன் இயந்திரத்தில் மாட்டிக்கொண்டது.

இதனால் சுற்றிய இயந்திரத்தில் துரைக்கண்ணு சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலிஸார் அங்கு வந்து, துரைக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “மோடி ஆட்சியில் ஆளுநர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது.. RN.ரவி செய்தது மிகத் தவறானது”: என்.ராம் கண்டனம்!