Tamilnadu
சாலையோரம் நின்றிருந்த இளைஞரை குத்திக் கிழித்த காட்டெருமை; குன்னூர் மலைப்பாதையில் பரபரப்பு!
மலை மாவட்டமான நீலகிரியின் குன்னூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது கன்னி மாரியம்மன் கோவில் தெரு.
இந்த தெருவில் நேற்று முன் தினம் மாலை சுமார் 5 மணி அளவில் காட்டெருமை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகர்வலம் வந்துள்ளது.
அப்போது மலைப்பாதையான கன்னி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள குடியிருப்பு சாலையில் நடந்து சென்ற போது சிவா என்ற இளைஞர் காட்டெருமை வரும் பாதையில் நின்று கொண்டிருந்தார்.
அவ்வாறு காட்டெருமை வழியை மறித்து நின்று கொண்டிருந்த இளைஞர் சிவாவை தாக்கியதில் வயிற்று மற்றும் முதுகு பகுதிகளில் காயங்களுடன் உயிர் தப்பினர்.
அவருக்கு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டெருமை இளைஞரை தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முன்னதாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வலம் வரும் போது பொதுமக்கள் எவரும் வெளியே சுற்றித்திரிய வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !