Tamilnadu
கணவரின் தம்பி மனைவி மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய பெண்... திருவாரூரில் கொடூரம்!
திருவாரூர் மாவட்டம், வேம்பனூர் மெயின் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அருள்செல்வி. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது.
இவர்களது பக்கத்து வீட்டில் செந்தில்குமாரின் சகோதர் குடும்பம் வசித்து வருகிறது. இந்த இரண்டு குடும்பத்திற்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாமானருடன் பேசிக் கொண்டிருந்த அருள்மொழி மீது, கொழுந்தனார் மனைவி பத்மாவதி கொதிக்கும் வெந்நீரை எடுத்து ஊற்றியுள்ளார். மேலும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அருள்மொழியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பத்மாவதி மற்றும் அவரது கணவரை கைது செய்தனர்.
Also Read
-
அண்ணா திராவிட கழகமாக மாறும் தமிழக வெற்றிக் கழகம்.. குதிரை பேரம் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜய்?
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!
-
“ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி அளித்த தவெக அரசு!” : திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கண்டனம்!
-
வெறும் வாய்ச்சவடால்தான்... 50 நாட்கள் ஆட்சியில் 5 ஆணவப் படுகொலைகள்... அச்சத்தில் மக்கள்!
-
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!