Tamilnadu
கணவரின் தம்பி மனைவி மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய பெண்... திருவாரூரில் கொடூரம்!
திருவாரூர் மாவட்டம், வேம்பனூர் மெயின் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அருள்செல்வி. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது.
இவர்களது பக்கத்து வீட்டில் செந்தில்குமாரின் சகோதர் குடும்பம் வசித்து வருகிறது. இந்த இரண்டு குடும்பத்திற்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாமானருடன் பேசிக் கொண்டிருந்த அருள்மொழி மீது, கொழுந்தனார் மனைவி பத்மாவதி கொதிக்கும் வெந்நீரை எடுத்து ஊற்றியுள்ளார். மேலும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அருள்மொழியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பத்மாவதி மற்றும் அவரது கணவரை கைது செய்தனர்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!