Tamilnadu
கணவரின் தம்பி மனைவி மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய பெண்... திருவாரூரில் கொடூரம்!
திருவாரூர் மாவட்டம், வேம்பனூர் மெயின் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அருள்செல்வி. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது.
இவர்களது பக்கத்து வீட்டில் செந்தில்குமாரின் சகோதர் குடும்பம் வசித்து வருகிறது. இந்த இரண்டு குடும்பத்திற்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாமானருடன் பேசிக் கொண்டிருந்த அருள்மொழி மீது, கொழுந்தனார் மனைவி பத்மாவதி கொதிக்கும் வெந்நீரை எடுத்து ஊற்றியுள்ளார். மேலும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அருள்மொழியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பத்மாவதி மற்றும் அவரது கணவரை கைது செய்தனர்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!