Tamilnadu
கணவரின் தம்பி மனைவி மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய பெண்... திருவாரூரில் கொடூரம்!
திருவாரூர் மாவட்டம், வேம்பனூர் மெயின் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அருள்செல்வி. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது.
இவர்களது பக்கத்து வீட்டில் செந்தில்குமாரின் சகோதர் குடும்பம் வசித்து வருகிறது. இந்த இரண்டு குடும்பத்திற்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாமானருடன் பேசிக் கொண்டிருந்த அருள்மொழி மீது, கொழுந்தனார் மனைவி பத்மாவதி கொதிக்கும் வெந்நீரை எடுத்து ஊற்றியுள்ளார். மேலும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அருள்மொழியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பத்மாவதி மற்றும் அவரது கணவரை கைது செய்தனர்.
Also Read
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!