Tamilnadu

தமிழ்நாட்டில் புதிதாக 13 பேருந்து நிலையங்கள் அறிவித்த அரசு : உங்கள் ஊரும் இருக்கிறதா பட்டியல் இதோ!

தமிழ்நாட்டில் ரூ. 424 கோடியில் புதிதாக 13 பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கான அனுமதியை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகிய 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

தமிழக அரசு, தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுகின்றன என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: உடல்நிலை பாதிக்கப்பட்ட வ.உ.சி கொள்ளுப்பேத்தி : முப்பதே நிமிடத்தில் நடவடிக்கை எடுத்த அமைச்சர் மா.சு.,!