Tamilnadu
குழந்தையை கடித்துக் குதறிய நாய்கள்..60 தையலுடன் மருத்துவமனையில் சிகிச்சை: தாய் வெளியிட்ட உருக்கமான வீடியோ
கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குழந்தை தனது தாத்தாவுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள கோல்டன் பீச் பூங்காவிற்குச் சென்றுள்ளது.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சூழ்ந்துக் கொண்ட தெருநாய்கள், குழந்தையை கடித்துக் குதறியுள்ளன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாய்களை விரட்டி குழழ்ந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காகப் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு 60 தையலுடன் குழந்தை சிகிச்சைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் குழந்தைகளின் தாய் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெயிட்டுள்ளார். அதில்"தனது குழந்தைக்கு ஏற்பட்டதைப் போன்று வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்ளை பிடிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி