Tamilnadu
விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும்.. ஆவினில் நடந்த ஒட்டுமொத்த ஊழலுக்கும் ராஜேந்திரபாலாஜியே காரணம்!
பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தேனியில் உள்ள ஆவின் விற்பனை நிலையங்கள் மற்றும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார். முதற்கட்டமாக உழவர் சந்தை அருகே உள்ள ஆவின் விற்பனை நிலையம், பெரியகுளம்சாலை பாலின் தன்மை குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார்.
ஆய்வுகளுக்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். அதனடிப்படையிலே தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றோம். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 83 கோடி ரூபாய் சிக்கியுள்ளது. அவரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் முன்னாள் அமைச்சர்கள் 10பேர் பெயர் உள்ளது.
அதில் எடப்பாடி பழனிச்சாமி பெயரும் உண்டு. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல வழக்குகள் உள்ளது. விசாரணையில் 3 கோடி ரூபாய் ராஜேந்திரபாலாஜி வாங்கியது தெரியவந்துள்ளது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டும். ஆவினில் நடந்த ஒட்டு மொத்த ஊழலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான். விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும்” என தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?