Tamilnadu
நடுக் கடலில் மீனவருக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.1 லட்சம் விலைபோன மீன்கள் : நடந்தது என்ன?
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீனவர்கள் 100க்கும் மேற்பட்ட மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்க நேற்று முன்தினம் சென்றனர். பின்னர் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரைக்குத் திருப்பினர். இவர்கள் வருகையை அறிந்து மீன் வியாபாரிகள் இவர்கள் வருகைக்காகக் காத்திருந்தனர்.
கரைதிரும்பிய மீனவர்களின் படகில் பாறை, கட்டா, விலைமீன், கடல்நண்டு, திருக்கை உள்ளிட்ட மீன்கள் இருந்தன. ஒரு மீனவரின் படகில் விலை உயர்ந்த 'லக்கி மீன்' என்று அழைக்கப்படும் 'கூரல் மீன்' இருந்தை பார்த்து வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பிறகு இந்த மீனை வியாபாரிகள் ஒருவரை ஒருவார் போட்டிப்போட்டு ஏலம் எடுக்க முயன்றனர். பின்னர் மீனவரின் படகிலிருந்து 15 கூரல் மீன்களை ரூ.1 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிச் சென்றனர். அதிக தொகைக்கு மீன்கள் விலைபோனதால் அந்த மீனவர் மகிழ்ச்சியடைந்தார்.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !