Tamilnadu
“இதயத் துடிப்பு நின்ற சிறுமியின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்” : அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி!
திருச்சி மாவட்டம், பூவாளுர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகள் தீபா. சிறுமி சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மழைநீர் தேங்கியிருந்த தண்ணீரில் தவறுதலாகக் கால் வைத்துள்ளார். அந்த மழைநீர் தண்ணீரில் மின்கம்பம் எர்த் வயர் வழியாக மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், மின்சாரம் தாக்கப்பட்டு சிறுமி தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு முதலுதவி அளித்தனர். அப்போது சிறுமியின் இதயத் துடிப்பு நின்றுபோய் இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு உடனே சிறுமியை லால்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அப்போது பணியிலிருந்த அரசு மருத்துவர்கள் துரிதமாக, அதிநவீன கருவியின் உதவியோடு சிறுமிக்கு 5 முறை ஷாக் சிகிச்சை கொடுத்து உயிரைக் காப்பாற்றினர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சிறுமியைத் திருச்சி அரசு மகாத்மாக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிறுமிக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுமியின் உயிருக்கு இனி எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கிய சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Also Read
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!