Tamilnadu
“தனியாக செல்லும் பெண்கள் டார்கெட்.. 25 பெண்களிடம் கைவரிசை காட்டிய கொள்ளையன்” : மடக்கி பிடித்த போலிஸார்!
சென்னை அடுத்த பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கலைச்செல்வி அணிந்திருந்த ஏழு சவரன் தங்க நகையைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.
இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்திலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர்தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. கைதான கார்த்திக், தனியாக செல்லும் கலைச்செல்வியைப் போன்று 25 பெண்களை குறிவைத்து, நகைகளை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்மீது பல குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!