Tamilnadu
நிவாரண முகாமில் இருந்த மக்களை நெகிழவைத்த போலிஸார்... கொட்டும் மழையில் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்!
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில் சென்னையில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மேலும் அதிகளவில் மழை பாதிப்பைச் சந்தித்த பகுதிகளில் இருந்த மக்களை காவல்துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர். இந்நிலையில் அவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்கும் பணியில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சென்னை துரைப்பாக்கம் அருகே இருந்த மக்களை மீட்டு அருகில் இருந்த பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸார், அங்கிருந்த மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு அந்த உதவிகளை செய்து கொடுத்து வந்துள்ளனர்.
அப்போது முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மோனிகா ஒன்ற குழந்தைக்கு முதல் பிறந்தநாள் என்று போலிஸாருக்கு தெரியவந்தது. வீட்டில் இருந்தால் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டிய குடும்பத்தினர் முகாமில் சோர்வாக இருந்ததை போலிஸார் உணர்ந்துள்ளனர்.
இதனையடுத்து குழந்தையின் பெற்றோருக்கே தெரியாமல் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட முடிவு எடுத்து, குழந்தைக்கு புத்தாடை, கேக், பலூன் மற்றும் இனிப்புகள், பரிசுப் பொருட்களை வாங்கி வந்து பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாடினர். போலிஸாரின் இத்தகைய செயல் முகாமில் இருந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலரும் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!