Tamilnadu
உஷார் பதிவு: ஐகோர்ட்டில் வேலை எனக் கூறி மோசடி; எச்சரிக்கை விடுக்கும் பதிவாளர்!
உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்களுக்கு வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறும் நபர்கள் நம்ப வேண்டாம் என்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே உயர் நீதிமன்ற பணியிடங்கள் நிரப்பப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தலைமை பதிவாளர், சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு, புதுவை கிழமை நீதிமன்றங்களில் சில பணியிடங்களுக்கு நேரடி பணி நியமனங்களாக என அறிவித்துள்ளதாகவும், இதை பயன்படுத்தி வேலைக்காக காத்திருக்கும் நபர்களிடம் சில மோசடி நபர்கள் பணியிடங்களை பெற்று கூறி மோசடி செய்வது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள்ளார்.
மேலும் இத்தகைய மோசடி நபர்களை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் நேரடி பணி நியமனங்கள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் பணி வாங்கி தருவதாக கூறும் நபர்கள் குறித்து சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி குற்றப்பிரிவு காவல்துறை இயக்குனரிடம் புகார் அளிக்கலாம் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!