Tamilnadu
"மக்களுக்கான நிவாரணப் பணிகளை உடனே வழங்கிட வேண்டும்": MP,MLAக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்பதால் அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என சென்னை மானிலை ஆய்வு மையத் தெரிவித்திருந்தது.
இதையடுத்து நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் விரைந்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்.
இதையடுத்து கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட நிவாரண பணிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Also Read
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!