Tamilnadu
“பழுக்க வைத்த இருப்பு கம்பியால் ‘தீவிரவாதி’ என எழுதிய ஜெயிலர்” : பஞ்சாப் சிறைவாசிக்கு நேர்ந்த கொடூரம்!
பஞ்சாப் மாநிலம் பர்னாலா சிறையில் 28 வயதாகும் கரம்ஜித் சிங் என்ற இளைஞர் உள்ளார். இவர் சமீபத்தில் போதைப் பொருள் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, அந்த வழக்கு விசாரணைக்காக மான்சா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளார்.
அப்போது, “சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளனர். எய்ட்ஸ், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்கு, தனி அறைகள் ஒதுக்கப்படவில்லை. கைதிகளை தவறாக நடத்துவதற்கு எதிராக, தான் குரல் கொடுத்த காரணத்திற்காக, சிறைக் கண்காணிப்பாளர் என்னை தாக்குகிறார். தொடர்ந்து சித்ரவதை செய்கிறார்” என்று நீதிபதியிடம் கரம்ஜித் சிங் முறையிட்டுள்ளார்.
அத்துடன் தனது முதுகில் ‘பயங்கரவாதி’ என்ற பொருள் படும், ‘அட்வாடி’ என்ற வார்த்தையை பழுக்க வைத்த இரும்பிக் கம்பியால் எழுதி முத்திரை குத்தியதாகவும் குற்றம் சாட்டி னார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!